சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 2019ம் ஆண்டு அரசாணையின்படி கடைகள் 24 மணிநேரமும் இயங்கிட அனுமதி அளித்து, பணப்புழக்க பெருக்கத்திற்கும், அரசு வருவாய்க்கும், பொருளாதார மீட்புக்கும் வழி செய்வதோடு, பொதுமக்கள் வேண்டும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்திட வழிவகுத்திடவும் வேண்டுமென தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழுத்தம் கொடுத்து வந்தது.