பந்தலூர்: பந்தலூர் அடுத்துள்ள தேவாலா பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த காட்டுயானை நாயை மிதித்து கொன்றுவிட்டு 2 வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த தேவாலாவில் உள்ளது கைதகொல்லி கிராமம். இந்த கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை புகுந்தது. யானையை பார்த்து அங்கிருந்த வளர்ப்பு நாய் குரைத்தது. இதனால் எரிச்சலடைந்த யானை அந்த நாயை மிதித்து கொன்றது. பின்னர் கூலித்தொழிலாளர்கள் கதிர்வேல் மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளை இடித்து தள்ளியது.அங்கிருந்த அரிசியை தின்றுவிட்டு வாஷிங் மிஷனை உடைத்தது. யானை புகுந்ததை அறிந்த குடும்பத்தினர் அருகில் ஓடிச்சென்று தப்பினர்.