காஞ்சிபுரத்தில் வங்கி வாடிக்கையாளர் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று வங்கி வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் பொது மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. வங்கி துறையில் நவீன மயமாக்கப்பட்ட வரும் சேவைகள் வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் கடன் பற்றிய விவரங்கள் மின்னணு செயலிகள் மூலம் பணம் பரிமாற்றங்கள் போன்ற பல சேவைகளை எடுத்துரைக்கும் பொருட்டு அனைத்து வங்கிகள் ஓர் இடத்தில் குழுமி வங்கிகளின் சேவைகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.இந்த முகாம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

Related Stories: