மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க நடவடிக்கை முதல்வர் உலக உணவு பாதுகாப்பு நாள் செய்தி

சென்னை: மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம் என உலக உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு தெரிவித்துள்ளார். உலக உணவு பாதுகாப்பு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு நாளில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: