போளூர் : போளூர் அடுத்த 99 புதுப்பாளையம் மலைக்குன்றில் விதி மீறி செயல்பட்ட கல்குவாரி மற்றும் அதையொட்டி உள்ள மலைப்பகுதிகளில் திருவண்ணாமலை தொல்லியல் துறை அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.போளூர் தாலுகா, 99 புதுப்பாளையம் கிராம எல்லையில் மலைக்குன்று உள்ளது. இங்கு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கான ஒப்பந்தம் முடிந்த பிறகும், தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடிய நிலையில், விதிமீறிய அந்த குவாரி செயல்பட 6 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதற்குள், மாவட்ட கலெக்டர் அந்த குவாரியை ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.