மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: மக்கள் தேசம் கட்சிதலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஆசைத்தம்பி மீது பொய் வழக்கு போட்ட திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மக்கள் தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மக்கள் தேசம் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வக்கீல் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் வேத மணி, மாநில செயலாளர் அரசு, மாணவரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: