சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஐடி போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: