சென்னை: கலைஞரின் 99வது பிறந்தாளையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவ சிலை மற்றும் அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘சமூக நீதி, பெண்ணுரிமை போன்றவற்றுக்கு திட்டங்களை தந்தவர் கலைஞர். சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக பல தீர்மானங்களை கொண்டு வந்தவர். நவீன தமிழகத்தின் சிற்பியான கலைஞர், வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார்’ என்றார்.