சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்னர் மாநில கல்வி முறையில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர் சென்னை மருத்துவ கல்லூரியின் சிறந்த மாணவர் உட்பட 36 பதக்கங்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 186வது இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு தினவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த மாணவருக்கு வழங்கப்படும் ஜான்ஸ்டோன் பதக்கம் எஸ்.பிரசாந்த் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 36 பதக்கங்களை வெற்ற மாணவர் பிரசாந்த், நீட் தேர்வு இல்லாமல் மாநில கல்வி முறையில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த கடைசி பேட்ச் மாணவராவார்.