நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன 2 வயது குழந்தையை சிறிது நேரத்தில் மீட்ட போலீசார்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன 2வது குழந்தையை சிறிது நேரத்தில் போலீசார் மீட்டனர்.நாட்றம்பள்ளி அடுத்த தோப்புலகுண்டா ஊராட்சி பூசாரி பகுதியை சார்ந்தவர் வினோத்குமார், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா. தம்பதிக்கு பிரேம்குமார்(2) குழந்தை உள்ளது. பிரியங்கா நேற்று மதியம் நாட்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே குழந்தையுடன் வந்தார். அப்போது, திடீரென பிரேம்குமார் காணாமல் போனார். அக்கம்பக்கம் என பல்வேறு இடங்களில் தேடியும் குழந்ைத கிடைக்கவில்லை.

இதுகுறித்து பிரியங்கா நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் பஸ் நிலையம் மற்றும் மேம்பாலம் அருகே உள்ள பகுதிகளில் பிரேம்குமாரை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே குழந்தை தனியாக அழுது கொண்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது பிரேம்குமார் என்பது தெரிந்தது. உடனே, குழந்தையை மீட்டு தாய் பிரியங்காவிடன் ஒப்படைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: