குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்கா தொடர் மழையால் பூக்கள் அழுகி பொலிவிழந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே சீசனுக்காக 3 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்கியது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.