சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பழங்குடி மக்களின் நலத்துறை அளிக்கப்பட்ட ரூ.265 கோடி நிதி பயன் படுத்தாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டது தகவல் அறியும் உயிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. அந்த தொகை வனத்துறை, உரகவளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உயிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 265 கோடி நிதியை பயன் படுத்தாமல் திருப்பி கொடுத்து உள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் பழங்குடி நலத்துறை தொர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு விவரங்களை பெற்றுள்ளார்.