சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பாஜவினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒன்றிய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம், பெட்ரோல் விலை ரூ.9.50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்து, மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார்.