சென்னை: எல்ஐசி நிறுவனம், பீமா ரத்னா என்ற புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பீமா ரத்னா என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை கடந்த 27ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாதது. சேமிப்பு, பாதுகாப்பு இரண்டையும் வழங்கும் ஒரு திட்டமாகும். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் என்ற பாலிசி காலத்தை விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் பாலிசி காலத்தில் கடைசி 2 ஆண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையில் 25 சதவீதம் வழங்கப்படும். முதிர்வு பெறும்போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை கிடைக்கும்.