8வயது சிறுமியிடம் சில்மிஷம் ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை: சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: சேலத்தில் 8 வயது சிறுமிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சேலம் அம்மாப்பேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(24). சேலம் 3 ரோடு அருகே தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். அப்போது 3ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சிறுமி ஒழுங்காக சாப்பிடாமலும், மிகுந்த பயத்திலும் இருந்து வந்துள்ளார்.

இதை பார்த்த பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் சதீஷ் தன்னிடம் தவறான செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் சதீஷை போலீசில் பிடித்து கொடுத்தனர். இதுகுறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஆசிரியர் சதீசை கைது செய்தனர். இந்த வழக்கை சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி சேரன் விசாரித்து ஆசிரியர் சதீசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனைவிதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: