சேலம்: சேலத்தில் 8 வயது சிறுமிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சேலம் அம்மாப்பேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(24). சேலம் 3 ரோடு அருகே தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். அப்போது 3ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சிறுமி ஒழுங்காக சாப்பிடாமலும், மிகுந்த பயத்திலும் இருந்து வந்துள்ளார்.