திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டையை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை மாநில இணை செயலாளரும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செவ்வை எம்.சம்பத்குமார், கடந்த ஆண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து செவ்வாப்பேட்டையில் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், மணிமண்டபம் திறப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம், முன்னாள் எம்பிக்கள் திருத்தணி கோ.அரி, ஜெ.ஜெயவர்தன், பேரவை மாநில நிர்வாகிகள் கே.ஏ.கே.முகில், சி.பி.மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் டி.பூங்கோவன், ச.சுமதி சம்பத்குமார், ச.நிரஞ்சன் சம்பத்குமார் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.