கிறிஸ்தவர் உட்பட 6 மதத்தினருக்கு சிறுபான்மை சான்றிதழ்: அசாம் அரசு முடிவு

கவுகாத்தி: முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட 6 மதத்தினருக்கு சிறுபான்மை சான்றிதழ் வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இவர் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், சில்சாரில் கிரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க  தேயிலை தோட்டம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதத்தினருக்கு சிறுபான்மையினர் சான்றிதழ் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: