அரசு சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வருவாய் துறையில் முக்கியமானவை பட்டா மாற்றம், நிலப் பிரிப்பு, பல்வேறு வகை சான்றிதழ்களை வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை. ஆனால் இந்த சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் ஒரு தாலுகா அலுவலகத்தில் முதல்வர் சோதனை நடத்தி பல்வேறு குறைபாடுகளை கேட்டறிந்தார். எனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தாலுகா அலுவலகங்களுக்கு சென்று குறிப்பிட்ட சில சேவைகளை விரிவாக ஆய்வு செய்து குறைகளை சுட்டிக் காட்ட வேண்டும்.

Related Stories: