சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வருவாய் துறையில் முக்கியமானவை பட்டா மாற்றம், நிலப் பிரிப்பு, பல்வேறு வகை சான்றிதழ்களை வழங்குதல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை. ஆனால் இந்த சேவைகளை வழங்குவதில் பல இடங்களில் காலதாமதமும், குறைபாடுகளும் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.