திருவாரூர்: கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலை.யில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைத்தார். தேசிய கல்விக்கொள்கையை அனைத்து பல்கலை.யிலும் எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி கருத்தரங்கில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி; தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை திட்டத்தின் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.