சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு வாடகை பாக்கி வைத்திருந்த தனியார் நூலக நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக நியாய வாடகை நிலுவை தொகை ₹40 லட்சத்திற்கான காசோலையை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கப்பட்டது.இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லஸ் சர்ச் சாலை இடத்தில் 3 கிரவுண்ட் 736.5 சதுர அடியில் உள்ள ரானடே நூலகத்திற்கு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை நிர்ணயம் செய்து கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. ரானடே நூலகத்திற்கு நியாய வாடகை 0.1 சதவிகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் நியாய வாடகை நிலுவை தொகை ₹79,10,860 செலுத்தாததால் மேற்படி நிறுவனத்தின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டு பொருட்களுடன் சீலிடப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.