சென்னை: சென்னை திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். காமராஜர் மாநகராட்சி மண்டபத்தில் புதுமண தம்பதியருக்கு முதலமைச்சர் சார்பில் 33 பொருட்கள் சீர்வரிசை வழங்கப்படுகிறது. தங்கத் தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, அடுப்பு, சமையலுக்கான பாத்திரங்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்படுகின்றன.