சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்துள்ள ‘விக்ரம்’ படம், வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது: நான் சினிமாவின் ரசிகன். அதனால்தான் நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்கவும் ஆரம்பித்தேன். ‘விக்ரம்’ படத்தை ஒரு நல்ல படமாக தயாரித்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்து தயாரித்த படங்களின் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் சினிமாவுக்கே செலவு செய்தேன். ஆனால், சிலர் லாபமாக வரும் பணத்தைக் கொண்டு ஓட்டல் கட்டலாம், மால் கட்டலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். ஒரு விவசாயி தன் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வது போலவே நான் சினிமாவில் முதலீடு செய்தேன்.