சென்னை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்க, ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறை தலைவர் பலராமன் ரவீந்திரன் கூறியதாவது: சென்னை ஐஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து காப்பாற்ற உதவும் ‘CombSGPO’ என்ற இயந்திர கற்றல் அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர். வன அதிகாரிகள் மற்றும் டிரோன்களின் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க ஒரு சிறந்த வழிமுறையாக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் டிரோன்கள் குறைவாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.