மொடக்குறிச்சி: பாசூர் அருகே தோட்டத்து கிணற்றில் விழுந்து மூழ்கிய போர்வெல் லாரி மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பாசூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்பாளையம், பறையன்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிவேல். விவசாயி. இவரது தோட்டத்தில் போர்வெல் அமைக்கப்பதற்காக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோகனப்பிரியா என்பவருக்கு சொந்தமான போர்வெல் லாரி நேற்று வந்துள்ளது. லாரியை திருச்செங்கோடு அடுத்த மொளசியைச் சேர்ந்த ராமசாமி (58) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.