சென்னை: சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் பணி நிரந்தரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கப்பல்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லாதவாறு தடுத்து கடல் மார்க்கமாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு வங்கக் கடலோரத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.