போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயான பூமியில் தொடர்ந்து பராமரிப்பு  பணி நடைபெற்று வருவதால், பொதுமக்கள் வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-150, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள போரூர் மின்சார மயானபூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி(சிம்னி) பழுதடைந்த காரணத்தினால் 03.05.2022 முதல் 22.05.2022 வரை 20 நாட்களுக்கு இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்பொழுது சீர்செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், 23.05.2022 முதல் 16.06.2022 வரை 25 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது.

எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: