காரைக்குடி: காரைக்குடி கோயில் திருவிழாவில் தேரோட்டம் நடத்த விடாமல், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. போலீசாரின் சமரசத்தால் தேர் மீண்டும் புறப்பட்டது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. கோயில் முன்பு புறப்பட்ட தேர் மேளதாளம் முழங்க, 4 கி.மீ தொலைவில் உள்ள சங்கம்திடல் காட்டம்மன் கோயில் முன்பு வந்தடைந்தது. அப்போது இருதரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் ஒருதரப்பை சேர்ந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. கோயில் கமிட்டியினர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.