வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், தஞ்சை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: