மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், ஆடை காலர் மடிப்புக்குள் ₹86 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கபசையை மறைத்து கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறியபடி கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார். இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.