நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர் மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறபித்துள்ளது. மதுரை சமயநல்லூர் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அருண்குமார் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனு அளித்து இருந்தார். நீட் தேர்வு போராட்ட வழக்குகள் ஏற்கனவே ரத்தானதை சுட்டிக்காட்டி அருண்குமார் மீதான வழக்கையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: