சென்னை: குரூப் 2, குரூ 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 23ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.