முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விக்கிரமராஜா சந்திப்பு: வணிகர் தின மாநாட்டில் பங்கேற்றதற்காக நன்றி தெரிவித்தார்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா  மே-5, 39வது வணிகர்தின மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சந்திப்பின் போது பொதுச்செயலாளர் கோவிந்தராஜுனு, மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்பின் போது, திருச்சியில் நடைபெற்ற மே-5, 39வது வணிகர் தின தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் பங்கேற்று, வணிக வரலாற்றில் முத்திரைப் பதிக்கும் விதமாக பேரமைப்பின் பல்வேறு தீர்மானங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் தீர்வு கண்டு, அவற்றிற்கு மேலாகவும், இந்த அரசு தீர்வு காணும். இம்மாநாட்டை வணிகர் விடியல் மாநாடாக உருவாக்கித் தந்தமைக்கு தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். மேலும், நிலுவையில் உள்ள தீர்மானங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வுகளை காண துரிதமான வழிமுறைகளை கையாண்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.

Related Stories: