பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கடும் குளிர் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பந்தலூர் பகுதியில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுங்குளிர் காணப்பட்டது.