திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் காவல் நிலையத்தின் எல்லை பகுதிகளில் தென்பெண்ணையாறு, துரிஞ்சல் ஆறு ஆகிய இரு ஆறுகள் உள்ளன. இங்கிருந்து கடந்த 3 வருடமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டது. பின்னர் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கடந்த 3 வருடமாக பறிமுதல் செய்யப்பட்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.