சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது, மகன் கபிலன் (22), இவர், தாம்பரத்தில் உள்ள எம்சிசி கல்லூரியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக கபிலன் காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். அப்போது, கீரப்பாக்கம் என்ற இடத்தில் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் கார் மீது நேராக மோதியது. இதில், பஸ்சுக்குள் கார் சொருகிக் கொண்டு அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் கபிலன் காரிலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.