சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற 2021-22 அறிவிப்பில் கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1,250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.