புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நூற்பாலை அமைக்க அரசு 54 ஏக்கர் இடம் வழங்கியது. இந்த இடத்தை தற்போது தனிநபர்கள் வீட்டுமனை பட்டா அமைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அழியாநிலை கிராமமக்கள் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.