அன்னூர்: கோவை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் பலியாகின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின், நூர் முகம்மது பிரதோஷ். இவர்கள் பழக்கடை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஆடு வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இவர்கள் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜீவா நகர் பகுதியில் ஆட்டு பட்டி அமைத்து அதில் இரண்டு பெரிய ஆடுகள், இரண்டு குட்டிகளை வளர்த்து வந்தனர். இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் ஆடுகள் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அவர்கள் வந்து பார்த்த போது கட்டிய நிலையில் இரண்டு ஆடுகள் கடித்து குதறி, குடல் வெளியே தள்ளப்பட்ட நிலையில் இறந்து கிடந்தன. இரண்டு குட்டி ஆடுகளின் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு வெளியே வீசி கிடந்தன.