துபாயிலிருந்து மதுரைக்கு கடத்தி வந்த ரூ.43 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: பெண் மீது வழக்கு பதிந்து விசாரணை

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து மதுரை வந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.துபாயில் இருந்து மதுரை வரும் தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா வான்வெளி நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பெண் பயணியிடம் சோதனை செய்ததில் பச்சை வண்ணத்தில் களிமண்ணால் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள பொருள் கைப்பற்றப்பட்ட.து அதை சோதனை செய்ததில் அந்த களிமண்ணில் வைத்து மறைத்து எடுத்த வந்த 831 கிராம் தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ.43,24,524 ஆகும். மதுரை விமான நிலைய சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் பெண் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: