ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு சார்பில் பசுமடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை கோயிலுக்கு வந்தார். பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பசு மடம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டனர். இதன்பிறகு அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி செலவில் பசுமடம் அமைக்கப்படும். பின்னர் இந்த பசு மடத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்படும் மாடுகள் பராமரிக்கப்படும்’ என்றார்.