சென்னை: சென்னை குரோம்பேட்டையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஆந்திராவை சேர்ந்த ஃபனிந்திரா மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, குரோம்பேட்டை சிக்னலில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஃபணிந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நண்பனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, உடனிருந்த நண்பர் விஷ்ணு, வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளார்.