கோயில் திருப்பணிகள் முடிந்தநிலையில் 12 கோயில்களில் குடமுழுக்கு; அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி ஒரு மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதன்படி கடலூர் பெரியகங்கணாங்குப்பம், சேமகளத்து மாரியம்மன் கோயில், திருநெல்வேலி, மேலநத்தம், அருந்தபசு அம்மன் கோயில், தஞ்சாவூர், ரயிலடி, சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், கோவை பாப்பநாயக்கன்பாளையம், பட்டத்தரசியம்மன் கோயில், சிவகங்கை , திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில், ஆகிய கோயில்களுக்கு வரும் 13ம் (நாளை) தேதியும், விருதுநகர்,  குன்னூர் எல்லையம்மன் கோயில், விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு நகர், கம்மாள கருப்பசாமி கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயிலுக்கு வரும் 15ம் தேதியும், திண்டுக்கல் பழனி நகர் அங்காளம்மன் கோயிலுக்கு வரும் 27ம் தேதியும், புதுக்கோட்டை மாவட்டம், ஆதிமத்தியார் ஜீனேஸ்வரர் கோயிலுக்கு ஜூன் 9ம் தேதியும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அழகு நாச்சியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Related Stories: