சென்னை: அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தும் ‘அசானி’ புயல் காரணமாக சென்னையில் இருந்து நேற்று காலை 7 மணிக்கும் காலை 10.40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் 2 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை 10.40 மணிக்கும் பகல் 1.45 மணிக்கும் வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.