தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் பட திறப்பு விழா சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சட்டப்பேரவையில் மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவ படத் திறப்பு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நேற்று, தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்பட திறப்பு விழா நிகழ்வையொட்டி விழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பேரவை தலைவர் அப்பாவு பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கினார். இதேபோல், அவை முன்னவர் துரைமுருகனுக்கும் பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கினார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்பட திறப்பு விழா சிறப்பு மலரின் முதல்பிரதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு விழா மலரை வழங்கினார். தொடர்ந்து, சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாஜ உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

Related Stories: