சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் வருகிற 13ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும், மக்களை ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்க வைக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களை முன்வைத்துதான் எனது படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். டான் படமும் அப்படிப்பட்டதுதான். இதில் கல்லூரி மாணவர்களின் பிரச்னை பேசப்படுகிறது. பான் இந்தியா படங்கள் என்று தனியாக எதுவும் இல்லை. எந்த படம் மொழிகடந்து இந்தியா முழுக்க மக்களால் வரவேற்கப்படுகிறதோ அந்த படம் பான் இந்தியா படமாகிறது.