சென்னை திருப்பூர் மாவட்டம் உடையர்பாளையம் கிராமத்தில் ஸ்ரீஉச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வகுரம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பெரியசாமி என்பவரும், திருப்பத்தூர் மாவட்டம் சின்னக்கமையம்பட்டு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ரமேஷ் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.