சென்னை: விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரண வழக்குகளில் அரசு எதையும் மறைக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றியது யார்? என கேள்வி எழுப்பிய முதல்வர், விசாரணை கைதிகள் விக்னேஷ், தங்கமணி மரணம் தொடர்பான வழக்கில் அரசு எதையும் மறைக்கவில்லை என்று கூறினார். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குபோல் விக்னேஷ், தங்கமணி வழக்கு விசாரிக்கப்படாது. நிச்சயம் இந்த அரசு அப்படி இருக்காது, யார் தவறு செய்தாலும் கட்டாயம் தண்டனை பெற்று தரப்படும். மீண்டும் சொல்கிறேன், சாத்தான்குளம் சம்பவம் போல் இது விசாரிக்கப்படாது, முறையாக விசாரிக்கப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.