சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசியதாவது:நாட்டுக்கு வணிகம் முக்கியம். ஒரு கிராமம் நகரமாகிறது, நகரம் மாநகரமாகிறது, இப்படி நகர வளர்ச்சிக்கு வணிகர்களுடைய பங்கு மிக முக்கியமானது. வணிகர்களை ‘ நான்-கவர்மெண்ட் ஸ்டாப்’ என்று கூட சொல்லலாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று சேவை செய்தவர்கள் வணிக பெருமக்கள்.