சென்னை: சென்னை மாநகராட்சியில் 63 சமுதாய கூடங்களும், 2 கலையரங்கங்களும் பொதுமக்களின் குடும்ப சுபநிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக நாள் வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. சமுதாயக்கூடம் முன்பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பும், கலையரங்கம் முன்பதிவு செய்வதற்கு 3 மாதத்திற்கு முன்பும் முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, முன்வைப்பு தொகை யை ஏதேனும் ஒரு வங்கியிலிருந்து ‘Revenue Officer, Corporation of Chennai’ என்ற பெயரில் வரைவோலை செலுத்த வேண்டும். அனைத்து சமுதாயக் கூடங்கள், கலையரங்கங்கள் முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.