சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் இன்று 16,881 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 478 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,850 ஆக உயர்ந்துள்ளது.